இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனர்கள் 65 பேரை விடுவிக்கக் கோரி போராட்டம்
கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை,காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 65 பேர் கடந்த செவ்வாய் கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில்
கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை,காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 65 பேர் கடந்த செவ்வாய் கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை வட்ட மீனவர்கள் கடந்த வியாழன் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை,காரைகால் மாவட்ட மீனவர் பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. இதில் 52 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்கள் மற்றும் 9 விசை படகுகளையும் வரும் 7ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும்.இல்லையெனில் வரும் 10ம் தேதி நாகை,காரைகால் மாவட்ட மீனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடற்கரையில் பெண்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது. இலங்கை கடற்படையினர் அடிக்கடி நாகை,காரைகால் மீனர்களை தாக்குவதை தடுக்ககோரி தமிழக முதல்வரை மீனவர் பஞ்சயத்தார்கள் சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.