முகப்பு
தற்போதைய செய்திகள்

விதிமுறை மீறி மணல் அள்ளிய விவகாரம்: தூத்துக்குடியில் அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு, வேம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் கனிம வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:07 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு, வேம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் கனிம வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி பகுதியில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ்ஸுக்கு  சொந்தமாக கடற்கரையை ஒட்டி நிலப் பகுதி வாங்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை ஒட்டி, விதிமுறையை மீறி மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கனிம வளத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.