முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் நகைக் கடையில் 200 சவரன் நகை திருட்டு

தூத்துக்குடியில் உள்ள நகைக் கடை ஒன்றில் செவ்வாயன்று இரவு 135 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள நகைக் கடை ஒன்றில் செவ்வாயன்று இரவு 135 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், ஜெயராஜ் சாலையைச் சேர்ந்தவர் திருமணி. இவர் அப்பகுதியில் நகைக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு பணிகள்  முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றார் திருமணி. பிறகு, புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் ஜன்னல் கம்பிகள்  உடைக்கப்பட்டு, கடையில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மத்தியப்பாக்கம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.