தூத்துக்குடியில் நகைக் கடையில் 200 சவரன் நகை திருட்டு
தூத்துக்குடியில் உள்ள நகைக் கடை ஒன்றில் செவ்வாயன்று இரவு 135 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன.
தூத்துக்குடியில் உள்ள நகைக் கடை ஒன்றில் செவ்வாயன்று இரவு 135 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், ஜெயராஜ் சாலையைச் சேர்ந்தவர் திருமணி. இவர் அப்பகுதியில் நகைக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றார் திருமணி. பிறகு, புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மத்தியப்பாக்கம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.