முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் கடத்தல் 2 பேர் கைது: டிராக்டர் பறிமுதல்

குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு, எண்ணேகோல்புதூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:47 AM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு, எண்ணேகோல்புதூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, தென்பெண்னை ஆற்றிலிருந்து உரிய அனுமதியின்றி மணல் எடுத்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன்(27) மற்றும் சுந்தரேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →