முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசிரியையை வழிமறித்து சங்கிலி பறிப்பு: இருவருக்கு வலைவீச்சு

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி (40). இவர், பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர் வழக்கமாக பள்ளிக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி (40). இவர், பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர் வழக்கமாக பள்ளிக்கு ஸ்கூட்டியில் வருவார். இன்றும் அவ்வாறு வந்தபோது, பக்கிரிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில், அவரது கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →