பண்ருட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்ட சட்டத்தினை சரியான முறையில் அமல்படுத்தக் கோரி, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அமர்ந்து அகில இந்திய விவசாய தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கோட்டாட்சிய
நூறு நாள் வேலைத் திட்ட சட்டத்தினை சரியான முறையில் அமல்படுத்தக் கோரி, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அமர்ந்து அகில இந்திய விவசாய தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஒழுங்கமைப்பு, வங்கி மூலம் கூலி பட்டுவாடா செய்வது, திட்டத்தினை வெளிப்படையான வகையில் சமூகத் தணிக்கை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.