காவல் நிலையத்தில் காயமடைத்தவருடன் போலீஸார் சமரசம்
பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாக்கியதில் காயமடைந்தவருடன், போலீஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து புகார் மனு வாபஸ் பெறப்பட்டது.
பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாக்கியதில் காயமடைந்தவருடன், போலீஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து புகார் மனு வாபஸ் பெறப்பட்டது.
பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த சேகர் என்பவர் குடும்ப பிரச்னை தொடர்பாக அவரது மருமகன் கோடங்கிபட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு வராமல் பிரபு காலதாமதம் செய்து வந்ததாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை பிரபுவின் அண்ணன் ரவி(46) என்பவரை காவல் சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ்பிரபு காவல் நிலைத்துக்கு அழைத்து வந்து விசாரித்தாராம். அப்போது சார்பு ஆய்வாளர் தாக்கியதில் ரவிக்கு கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவியிடம், போலீஸார் சரமச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் சேகர் அளித்திருந்த புகார் தொடர்பான பிரச்னை குறித்து, இரு தரப்பினரும் உறவினர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்வு ஏற்படுத்திக் கொள்வதாக முடிவு செய்து, புகார் மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ரவி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
Advertisement