பல்லவன் கிராம வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆரப்பாட்டம்
வங்கிக் கணக்கு துவங்குவதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து பண்ருட்டியில் பல்லவன் கிராம வங்கியை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கிக் கணக்கு துவங்குவதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து பண்ருட்டியில் பல்லவன் கிராம வங்கியை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமத்தில் பல்லவன் கிராம வங்கி இயங்கி வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பயனாளர்கள் வங்கி கணக்கு துவங்குவதற்காக இந்த வங்கியில் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். வங்கி கணக்கை துவங்குவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல்லவன் கிராம வங்கியை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.