முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரிகளில் அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பிச்சுமணி தெரிவித்தார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2013 at 9:04 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:46 PM

அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பிச்சுமணி தெரிவித்தார்.    

 
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கி மூன்று நாளுக்கு நடைபெற இருக்கிறது. இதன் தொடக்க விழாவிற்கு தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் ஆர்.பூமிநாதன் வரவேற்புரை வழங்கினார்.


இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் கே.பிச்சுமணி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தற்போது, அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிளஸ்2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளையே விரும்புகின்றனர்.  இந்தியாவிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு நோபல் பரிசு பெற்ற ராமனுக்கு பிறகு இப்பரிசு பெற மாணவ, மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட முன்வர வேண்டும்.
அதேபோல் உயர் கல்வி படித்து வருகிறவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இதுபோன்ற வாய்ப்புகளையும் வசதிகளையும் முழுமையாக பயன்படுத்தும் பொழுது இந்திய ஆராய்ச்சிகள்  அனைத்தும் வருவாய் ஈட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பேராசிரியர் பிச்சுமணி தெரிவித்தார்.   

Advertisement


இப்பயிற்சி முகாமில் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதிப்பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார், ஆராய்ச்சி டீன் பேராசிரியர் பிரிதிவிக்குமரன் உள்ளிட்டோர் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக வேதியியல் துறை தலைவர் ராமன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை செந்திக்குமார நாடார் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.