பைக் மீது ஜீப் மோதியதில் கூலித்தொழிலாளி பலி
காசிதர்மத்தை சேர்ந்தவர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி(22).கூலி வேலை செய்து வருகிறார்.இன்று முத்துப்பாண்டியும்,அவரது உறவினர் சந்தானமும் பைக்கில் கடையநல்லூருக்கு சென்று விட்டு மீண்டும்
கடையநல்லூர் அருகே பைக் மீது ஜீப் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.
காசிதர்மத்தை சேர்ந்தவர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி(22).கூலி வேலை செய்து வருகிறார்.இன்று முத்துப்பாண்டியும்,அவரது உறவினர் சந்தானமும் பைக்கில் கடையநல்லூருக்கு சென்று விட்டு மீண்டும் காசிதர்மத்திற்கு சென்று கொண்டிருந்தனராம்.அவர்கள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற பொழுது,கேரளாவிலிருந்து,புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் மோதியதாம்.இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி இறந்தார்.
கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜீப் ஓட்டுநரான குளத்துப்புழையைச் சேர்ந்த சதீஸ்குமாரை கைது செய்தனர்.