தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனம் பறிமுதல்
சிதம்பரம் அருகே புவனகிரியில் இன்று சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது
தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் அருகே புவனகிரியில் இன்று சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த புவனகிரியை அடுத்த மணவெளியைச் சேர்ந்த தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மின்வேனை சோதனை மேற்கொண்டனர். அவ்வாகனத்திற்கு தகுதி சான்று இல்லாததால் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து புவனகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.