முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் தீவிபத்து: ரூ.30 லட்சம் மதிப்புள்ள மூலிகைகள் நாசம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே செயல்பட்டு வரும் தனியார் ஆயுர்வேத மூலிகை தயாரிப்பு மருத்துவமனை ஒன்றில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 PM
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே செயல்பட்டு வரும் தனியார் ஆயுர்வேத மூலிகை தயாரிப்பு மருத்துவமனை ஒன்றில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான மூலிகைப் பொருள்கள், மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.