முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதி சப்-இன்ஸ்பெக்டர் கால்முறிவு

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:23 PM
பகிர்:

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அன்பழகன். இவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எஸ்.பி.கோயில் தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் உசூப்பூரைச் சேர்ந்த அருண்ராஜ் (22), விமல்குமார் (21), முத்துக்குமார் (21), தினகர் (22) ஆகிய நால்வர் வந்துள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லும் போது, நிறுத்தாமல் அவர் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.