திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை: ரூ. 3 லட்சம் திருட்டு
திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீசுவரர் ஆலயம் எதிரே ஹோமியோபதி கிளினிக் வைத்திருப்பவர் சுப்பிரமணியன் மகன் புனர்செல்வம். இவர் அந்தக் கடையிலேயே ஒரு தொண்டு நிறுவனமும் சேர்த்து நடத்தி
திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீசுவரர் ஆலயம் எதிரே ஹோமியோபதி கிளினிக் வைத்திருப்பவர் சுப்பிரமணியன் மகன் புனர்செல்வம். இவர் அந்தக் கடையிலேயே ஒரு தொண்டு நிறுவனமும் சேர்த்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் ரூ. 2.75 லட்சம் பணம் வைத்திருந்தாராம். இவரது கிளினிக்கில் இருந்து அந்தப் பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு, அருகில் ஸ்ரீதரன் என்பவரின் மளிகைக் கடையை உடைத்துத் திருட முயற்சி செய்துள்ளனர். இயலாத சூழ்நிலையில், அருகில் இருந்த செருப்பு மற்றும் வளையல் கடைகளில் ரூ.35 ஆயிரத்தைத் திருடிச் சென்றனர். மொத்தம் ரூ. 3.10 லட்சம் திருட்டு நடந்துள்ளதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.