சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடத்துக்கான பூமிபூஜை
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சி தற்போதைய அலுவலகத்திற்கு பின்புறம் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி ரூ 1.25 கோடி, நகராட்சி நிதி ரூ 1.25 கோடி, ஆக மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நகராட்சி நிர்வாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.