முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூர் பெரியாற்றுப் பாதையில் கொட்டப்படும் மாத்திரைகள்: சிறுவர்கள் சாப்பிடும் வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சி

கடையநல்லூரிலிருந்து, பெரியாற்றுக்குச் செல்லும் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

கடையநல்லூரிலிருந்து, பெரியாற்றுக்குச் செல்லும் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாற்றுக்குச் செல்லும் சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பாதையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்தச் சாலை வழியாகத்தான் ஏராளமானோர் ஆற்றில் குளிக்கச் செல்வார்கள். மேலும் விவசாய நிலங்களுக்கும் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், குளிப்பதற்காக பள்ளி மாணவர்கள் இந்த வழியாகச் செல்லும் போது, கொட்டிக் கிடக்கும் மாத்திரைகளை தவறுதலாக சாப்பிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சாப்பிடும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும்  உள்ளது.

எனவே, உடனடியாக மாத்திரைக் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், காலாவதியான மாத்திரைகளை முறையாக அப்புறப்படுத்த மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →