முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ. 4 லட்சம் நகை, பணம் திருட்டு: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை பணியாளர் வீட்டில் ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிய பொறியியல் மாணவர், அவரது தாயார் மற்றும் 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை பணியாளர் வீட்டில் ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிய பொறியியல் மாணவர், அவரது தாயார் மற்றும் 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பணகுடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் சங்கர்குமார் (40). தனியார் ஓடு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணி செய்து வருகிறார். அவர் வசிக்கும் இதே காம்பவுன்டில் வசிப்பவர் காளிதாஸ் மகன் பாஸ்கர் (20). தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாயார் ராமலட்சுமி (40). ம் ராஜலிங்கம் மனைவி பேச்சியம்மாள் (42). கூலித் தொழிலாளி. மற்றும் இதே காம்பவுண்டில் வசிக்கும் ராமர் மனைவி முத்து (40).

வெள்ளிக்கிழமை இரவு சங்கர்குமார், தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றாராம். வீட்டுக்கு பூட்டு எதுவும் போடாமல் சாதாரணமாக பூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஸ்கர், அவரது தாயார் உள்ளிட்டோர் சங்கர்குமார் வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், 9 பவுன் எடையுள்ள ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடினராம்.

பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டதை அறிந்த சங்கர்குமார், பணகுடி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர், அவரது தாயார் ராமலட்சுமி, பேச்சியம்மாள், முத்து ஆகியோர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவர், மற்றும் 3 பெண்களையும் போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →