முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப் பகுதியை முழுவதும் கண்காணிக்க 40 கண்காணிப்பு.....

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப் பகுதியை முழுவதும் கண்காணிக்க 40 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு முடிக்கி விடப்பட்டுள்ளதாக கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் கூறினார்.

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதாலும், தீவிரவாதிகளின்  மிரட்டல் உள்ளதாலும் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் அண்மையில் வெட்டப்பட்டது. மேலும் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ள ஸ்ரீவடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரம், கோயிலின் தேர் ஆகியவற்றிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பாதுகாப்பு பலப்படுத்துவது குறித்து வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதன் பேரில் ராஜகோபுரம் நுழைவு வாயில், ஆடிப்பூர மண்டபம், ஸ்ரீஆண்டாள் பிறந்த நந்தவனம், ஆண்டாள் கோயில் சன்னதி, கடை வீதி, ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், சுற்று பிரகாரங்கள், கண்ணாடி மாளிகை முன்புறம், சக்கரத்தாழ்வார் சன்னதி, வடபத்ரசாயனர் கோயில் படிக்கட்டுகள், பகல்பத்து மண்டபம்  என 40 இடங்களிடம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனைக் கண்காணிக்க தக்கார் அறை, செயல் அலுவலர் அறை, போலீஸ் புற காவல் நிலையம் ஆகிய இடங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எதிர் எதிர் திசையில் பொருத்தப்பட்டுள்ளதால், கோயிலுக்குள் வருபவர்கள் முகம் தெளிவாகத் தெரியும். இதன் மூலம் கோயிலின் அனைத்துப் பகுதிகளும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது என்றார் தக்கார் ரவிச்சந்திரன்.

முழு கட்டுரையைப் படிக்க →