முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த தலித் மக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே தலித் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே தலித் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஊர் கட்டுப்பாட்டை தளர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகே உள்ளது கொண்டாம்பட்டி தலித் காலனி. இந்த பகுதியில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதன் விளைவாக கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி கொண்டாம்பட்டி காலனி தாக்குதலுக்குள்ளானது.இதைத் தொடர்ந்து, தற்போது எங்கள் கிராம மக்கள் மீது மற்றொரு சமூகத்தினர் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனால், எங்களுக்கு அந்த பகுதியில் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், கால்நடைகளுக்கு தவிடு விற்பனை செய்யப்படுவதில்லை. இது போல பல்வேறு கட்டுப்பாடுகள் எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் இன்னல்களுக்கு உள்ளாகிறோம்.எனவே, தலித் மக்கள் மீது விதிக்கப்பட்டு ஊர் கட்டுப்பாட்டை தளர்த்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →