முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:20 PM
பகிர்:

தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சேர்ந்த உத்திரை செல்வன் வயது 30 இவர் மனைவி சரிதா வயது 28 சரிதாவுக்கு திருமனத்துக்கு முன்பே பிறந்த குழந்தை பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் வயது 3 இந்த குழந்தையை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி அன்று பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதோடு புதியம்புத்தூரில் உள்ள சிறிய பாலத்தில் இருந்து தூக்கி விசியுள்ளனர்.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதி எம்.பால்துரை இன்று இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.