சாலையோர குடிசைக்குள் புகுந்த டேங்கர் லாரி : தொழிலாளி தலை நசுங்கி சாவு
ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அண்ணா நகர் பகுதி உள்ளது. அங்கு குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46). இவருடை மனைவி முனியம்மாள் (40),
ஆம்பூரில் சாலையோர குடிசைக்குள் டேங்கர் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அண்ணா நகர் பகுதி உள்ளது. அங்கு குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46). இவருடை மனைவி முனியம்மாள் (40), தாய் புஷ்பா (64), பிள்ளைகள் விஜயகுமார் (19), முரளி (12) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நோக்கி சென்ற டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கருணாகரன் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முனியம்மாள் மற்றும் புஷ்பா ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
Advertisement