முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் 40 நாட்கள் குழந்தையின் கண்கள் தானம்

சிதம்பரம் கன்னிராமபொன்னுசாமித்தெருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார்-தில்லைகரசி ஆகியோருக்கு பிறந்த 40 நாட்களான ஆண் குழந்தையான ஆர்.ஈகன் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்களை

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

சிதம்பரம் கன்னிராமபொன்னுசாமித்தெருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார்-தில்லைகரசி ஆகியோருக்கு பிறந்த 40 நாட்களான ஆண் குழந்தையான ஆர்.ஈகன் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்களை சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழம் மற்றும் நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு ஆகியவை தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்தானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்கிரன், ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு நிறுவனர் ஒய்.ராஜசிதம்பரம், தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகி கு.சிவப்பிரகாசம் ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.