முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறை பூண்டி அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகே உள்ளே கீரகளூர் கிரமத்தை சேர்த்ந் கோவிந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் கடந்த மாதம் காணமல் போனது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகே உள்ளே கீரகளூர் கிரமத்தை சேர்த்ந் கோவிந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் கடந்த மாதம் காணமல் போனது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இது சம்பந்தமாக  நங்காலி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சுந்தர் (34) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு திருத்துறை பூண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை போலீசார் விசாரணை என்ற பெயரில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனால் சுந்தரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →