திருத்துறைபூண்டியில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம்
திருத்துரை பூண்டியில் விசாரணையின் போது கைதி உயிரிழந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருத்துரை பூண்டியில் விசாரணையின் போது கைதி உயிரிழந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகே உள்ளே கீரகளூர் கிரமத்தை சேர்த்ந் கோவிந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் கடந்த மாதம் காணமல் போனது. இது சம்பந்தமாக நங்காலி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சுந்தர் (34) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக போலீஸார் திருத்துறை பூண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு திருவாரூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து சுந்தரை விசாரணை செய்த திருத்துறை பூண்டி காவல் ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமை காவலர்கள் ரமேஷ், நடராஜன் ஆகிய 4 பேரையும் பணி இடை நீக்கம் செய்து தஞ்சை காவல் சரக டி.ஐ.ஜி.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளர்.