முகப்பு
தற்போதைய செய்திகள்

2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் பாதிப்பு

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது, மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது. தொடக்க வீரர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது, மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது. தொடக்க வீரர் தவான் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோர்கல் பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய புஜாரா, முரளிவிஜயுடன் சிறப்பாக ஆடினார்.  

இந்நிலையில் 61 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றை ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.