8வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குதண்டனை
மகாராஷ்ட்ரா மாநிலம் தானேமாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு சேகர் குப்தா என்பவர் எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை
மகாராஷ்ட்ரா மாநிலம் தானேமாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு சேகர் குப்தா என்பவர் எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த தானே நீதிமன்றம் சேகர் குப்தாவை சாகும் வரை தூக்கிலட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சேகர் குப்தா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கொடூர குற்றம்புரிந்த சேகர் குப்தாவிற்கு தூக்குதண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டனர்.