முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு பெண்னை கத்தி முனையில் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இசையை கற்றுக் கொள்வதற்காக  மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இசையை கற்றுக் கொள்வதற்காக  மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்து வந்தார்.

 கடந்த  2012 நவம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த அலி அன்சாரி என்பவர், கத்தியை காட்டி நகை, பணத்தை கேட்டு மிரட்டிதோடு. இரண்டு முறை  பலாத்காரம் செய்துள்ளனார்.பின்னர் இளம் பெண்னை கொலை செய்துவிட்டு தப்பினார்.

 இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அலி அன்சாரியை மறுநாள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இன்று  அலி அன்சாரிக்கு ஆயுள்தண்டனைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இவ்ர மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.