முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி தலைமைசெயலகத்திற்குள் நுழைய செய்தியாளர்களுக்கு தடை

தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற இரண்டு நாட்களக்குள்ளாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதற் கட்டமாக தில்லி தலைமைசெயலகத்திற்குள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற இரண்டு நாட்களக்குள்ளாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதற் கட்டமாக தில்லி தலைமைசெயலகத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்துள்ளார்.

 மேலும் அமைச்சர்களின் அறைக்குள்ளோ அல்லது தில்லி தலைமை செயலகத்திற்குள்ளோ செல்வதற்கு அனுமதி இல்லை என்று செய்திகாளர்களை பாதுகாவலர்கள் ,இன்று திருப்பி அனுப்பினர்.இதற்கு கடும் எதிர்ப்வு தெரிவித்த செய்தியாளர்கள் தலைமை செயலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்த்தில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எந்த வித அடையா அட்டையும் இன்றி தில்லி தலைமைசெயலகத்திற்குள் நுழையலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்திற்கு  பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.