குற்றவாளிக் கூண்டிலேயே விசாரணைக்கு வந்தவர் மரணம்: பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தவர் திடீரென நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இது பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தவர் திடீரென நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இது பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர், தென்னம்பாளையம், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (30). இவர் பல்லடம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணைக்காக வந்திருந்தார். குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த அவர், திடீரென்று நெஞ்சு வலி வந்து உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.