முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில், இளம் பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில், இளம் பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:16 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில், இளம் பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது மைதீன் மனைவி பீமா பீவி (42). இவரது மகள் ஹபிபா பானுவை, சாட்சியாபுரம், ஆசாரி காலனியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் நாசர் அலி (27) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க 27.5.12-ம் தேதி நிச்சயம் நடைபெற்றுள்ளது. அப்போது ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை வரதட்சிணையாக கொடுப்பது என்று பேசி முடித்துள்ளார்கள். முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்கள். சில நாட்கள் கழித்து நாசர் அலி குடும்பத்தார் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் நாசர் அலி குறித்து, மணமகள் வீட்டார் விசாரித்துள்ளார்கள். அதில் ஏற்கனவே நாசர் அலி 3 திருமணம் செய்தவர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருமணத்தை நிறுதிவிட்டார்கள். 17.1.13-ம் தேதி, வரதட்சிணையாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, ஆபாசமாக பேசி மிரட்டினார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களை ஏமாற்றி, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவை பீமா பீவி அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாசர் அலி, அவரது தாயார் பாத்மாவதி (எ) ஆயிஷா பீவி (52) ஆகியோர் கைது செய்தனர். எஸ்.முகமது இஸ்மாயிலை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →