சிதம்பரத்தில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி தொடக்கம்!
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சியில் அனைத்து வகைப் பூச்செடிகள், பல வண்ணங்களில் பலவகையான ரோஜா செடிகள், குறிப்பாக சென்டட் ரோஜா செடிகள், பிளாக் ரோஸ் செடிகள், பல வகையான வண்ணங்களில் செம்பருத்தி செடிகள், வாஸ்து செடிகள், ஒட்டு ரக பழ மரக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் செடிகள் விற்பனையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு என்கிறார் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.எம்.நாச்சியப்பன்.