விருதுநகரில் இரு மாணவர்களைக் காணவில்லை என போலீஸில் புகார்
விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற இரு மாணவர்களைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார்
தற்போதைய செய்திகள்விருதுநகரில் இரு மாணவர்களைக் காணவில்லை என போலீஸில் புகார்
விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற இரு மாணவர்களைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார்
விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற இரு மாணவர்களைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.
விருதுநகர், ஆலம்பட்டி, திருப்பதி தெருவைச் சேர்ந்தவர் செல்லக்கனி. இவரது மனைவி பரிமளாதேவி. இவர்களின் மகன் வினோத்குமார் 10-ம் வகுப்பும், விஜயகுமார் 9-ம் வகுப்பும் முத்துராமன்பட்டியில் உள்ள ராவ்பகதூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளி சென்றவர்கள் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து தாய் பரிமளா தேவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.