முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:27 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையாக்கோனார் மகன் தவசிலிங்கம். இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சுபா (36) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உண்டு. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக சுபா கணவரைவிட்டுப் பிரிந்து தாய் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் சுபா இருந்த இடத்திற்குச் சென்ற தவசிலிங்கம், தகாத வார்த்தைகளால் பேசி சுபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து சுபா, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் எம்.புவனேஷ்வரி வழக்குப் பதிவு செய்து தவசிலிங்கத்தைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →