சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சுனில்குமார் தலைமையில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனால் இன்று கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை.