சிதம்பரத்தில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்
உரிய நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரத்தில், விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரிய நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரத்தில், விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் பயிர் பாதிப்புகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 200 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.