திருக்கடையூர் வந்துள்ள இலங்கை எம்.பி.க்கு எதிர்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவின் வருகையை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர் திருக்கடையூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. இதை அடுத்து அரசியல் கட்சியினர் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.