முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் ஒருவர் கொலை! வீட்டிற்கு தீவைப்பு

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 பேர் கொண்ட கும்பலால் வீட்டிற்கு தீவைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:37 AM
பகிர்:

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 பேர் கொண்ட கும்பலால் வீட்டிற்கு தீவைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே வடமூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சம்பத் (47). கொத்தனார் வேலை செய்யும் இவர் வீட்டில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் தேர்தல் முன்விரோதம் காரணமாக சம்பத் வீட்டிற்து தீ வைத்தனர். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த சம்பத்தை கத்தி, இரும்பு பைப், சுத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள். இறந்து போன சம்பத்திற்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.