போலீஸாரால் தீவிர கண்காணிப்பில் பலாத்கார குற்றவாளிகள்
தில்லி மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள், காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
தில்லி மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள், காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
தில்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில் 5 பேர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சிறார்கள் காப்பகத்தில் உள்ளான். சிறையில் உள்ள 5 பேரும், தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்களது மனநிலை, தற்கொலை செய்து கொள்ளும் வகையில் தற்போது உள்ளது. எனவே, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க, காவல்துறையினரால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.