முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு : காவல்துறை மறுப்பு

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில்,அவரது நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில்,அவரது நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

டிசம்பர் 16ம் தேதி இரவு இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மாணவியின் நண்பர் கூறியது போல கால தாமதம் ஏற்படவில்லை என்றும், வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

புது தில்லியில் இன்று காவல்துறை உயர் அதிகாரி, செய்தியாளர்களைச் சந்தித்து, நண்பரின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →