தேவகோட்டை அருகே மூதாட்டியை தாக்கியதில் உயிரிழப்பு
தேவகோட்டை அருகேயுள்ளது சாத்திக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி(வயது60). இவர் கடந்த இரண்டு
தேவகோட்டை அருகேயுள்ளது சாத்திக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி(வயது60). இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அருகிலுள்ள தனது தோட்டத்திற்கு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மர்ம மனிதர்கள் சிலர் அவரை தாக்கி அவர் கழுத்து காதில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுவி்ட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவகோட்டை தாலுகா காவல்துறை ஆய்வாளர் முத்துராஜ் இது குறி்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.