வீராணம் ஏரி நீரேற்றும் நிலையம் முன்பு உழவர் முன்னணியினர் ஜன.10-ல் ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம்
பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம் ஏரிக்கரையில் உள்ள சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நீரேற்றும் நிலையம் எதிரில் தமிழக உழவர் முன்னணி சார்பில் ஜன.10-ம் தேதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக உழவர் முன்னணியினர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஏரி நீரேற்று நிலையத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றுகிறார்.