முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு

மதுரை மாவட்டம், பேரையூர், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கா.ராமர் (44). இவரது மகள் பிரியங்கா (20). பிரியங்காவை, ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தங்குளத்தில் உள்ள

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு

மதுரை மாவட்டம், பேரையூர், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கா.ராமர் (44). இவரது மகள் பிரியங்கா (20). பிரியங்காவை, ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தங்குளத்தில் உள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:03 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்ததில் காயமுற்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், பேரையூர், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கா.ராமர் (44). இவரது மகள் பிரியங்கா (20). பிரியங்காவை, ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தங்குளத்தில் உள்ள ரஞ்சித் என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். ரஞ்சித் டெய்லர் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்திற்கு பிரியங்கா சொந்த அத்தை மகள் ஆவார்.

8-ம் தேதி வீட்டில் பிரியங்கா ஸ்ட்வ் பற்ற வைத்துவிட்டு, மண்ணெண்ணை இருக்கிறதா என்று தூக்கி பார்த்தாராம். அப்போது மண்ணெண்ணை கசிந்து, சிதறி பிரியங்கா மீது தீப்பிடித்ததாம். இதில் காயமுற்ற அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், கோட்டாட்சியர் ரெங்கன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →