முகப்பு
அபிஷேக் சர்மா
கிரிக்கெட்

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

கிரிக்கெட்

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

Updated On : 3 மார்ச், 2026 at 4:39 PM
அபிஷேக் சர்மா
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: மனதளவில் போட்டியில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறாரா என்பதை அணி நிர்வாகம் அவருடன் பேச வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷனை களமிறக்கலாம். ஆனால், அபிஷேக் சர்மாவின் மீது நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அபாரமாக விளையாடியிருக்கிறார்.

வான்கடே திடலில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியுள்ளதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் வான்கடேவில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். மிகப் பெரிய சதத்தினை அவர் வான்கடேவில் விளாசியுள்ளார் என்றார்.

கடந்த ஆண்டு வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Ravi Shastri has spoken about Abhishek Sharma playing in the semi-final match against England in the T20 World Cup.

முழு கட்டுரையைப் படிக்க →