சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலி
சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இந்த மணல் குவாரியில் வைப்பாற்றில் மணல் அள்ளியது போக சுற்றியுள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பல முறை தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பட்டா நிலங்களில் மணல் அள்ளும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சங்கரன்கோயில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31), மற்றும் மேலும் இருவர் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணல் சரிந்து முத்துராமலிங்கம் மணலில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement