மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்
மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.
மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.
இந்த விரைவு ரயில் மைசூர், மயிலாடுதுறை இடையே தினசரி கரூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் மைசூரிலிருந்து தினசரி இரவு 2 மணிக்கு கரூர் வந்து சேரும். சனிக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 4.20 மணிக்கு வந்து சேர்ந்தது.
இதனால், இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் 2 மணி நேரம் கடும் பனியில் காத்திருக்க நேரிட்டது. நெல்லை, ஜம்முதாவி விரைவு ரயில், சென்னை, கோவை விரைவு ரயில்கள் ஈரோடு ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்ததால், மைசூர், மயிலாடுதுறை விரைவு ரயில் தாமதமாக கரூர் வந்தது.