வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் கே.கண்ணன் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் எல்.ஜீவா, ஒன்றியத் தலைவர்கள் எஸ்.சுப்பிரமணியன், சி.தர்மதுரை, ஜே.எம்.ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், துணைத்தலைவர் பி.கற்பனைச்செல்வன், மாவட்ட மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.