தற்போதைய செய்திகள்

சி.ஏ. படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாலா

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, மும்பை வாழ் தமிழ் மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். அவரது மகள் பிரேமா. அவர் அண்மையில் நடைபெற்ற சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித்துறையில் மிக உயரிய கல்வியாகக் கருதப்படும் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்த பிரேமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT