தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தேவர் (60). இவரது உறவினர் பட்டமுத்து (37). இவர்கள் இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இன்று காலை 8.30 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர் அரிவாளால் வெட்டினர்.
இதில், பட்டமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சண்முகத்தேவர் உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.