தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி அருகே கவுன்சிலர் தீக்குளிப்பு முயற்சி: கைது செய்ய மக்கள் எதிர்ப்பதால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் ஊராட்சியில் இன்று காலை கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்

சி. சுரேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் ஊராட்சியில் இன்று காலை கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, 6வது வார்டு உறுப்பினர் எம்.சஜீவன், அந்தப் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கறிக்கோழிக் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், ஆட்சியர் அதனை அகற்ற உத்தரவு இட்டும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றும் கூறி, திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த போலீஸார், சஜீவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், காவல் துறையினர் வந்த வாகனத்தை வழிமறித்த பொதுமக்கள், அவரை கைது செய்யக் கூடாது என்றும், உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறினர். பொதுமக்களின் மறியலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT