முகப்பு
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கொலை வழக்கு : சென்ட்ரிங் மேஸ்திரி கைது

பண்ருட்டி அருகே கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை காவல்துறை கைதுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:

பண்ருட்டி அருகே கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை காவல்துறை கைதுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நாராயணன். இவருடைய மனைவி ஆண்டாள் (64).

கடந்த வாரம் விவசாய நிலத்துக்கு தண்ணீ பாய்ச்ச சென்ற ஆண்டாள், அங்கு கழுத்து நெறித்து இறந்து கிடந்தார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பண்ருட்டி போலீசார் நடத்திய விசாணையில் அதேப் பகுதியைச் சேர்நத் சென்ட்ரிங் மேஸ்திரி பாஸ்கரன் (26) தான்  மூதாட்டியைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து புதன்கிழமை காலை பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →